சிலப்பதிகாரம்_கட்டுரை காதை
கட்டுரை காதை
1:மதுராபதி
சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக்
குஉண்கண் தவளவாள் முகத்தி;
கடைஎயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி;
இடைநிலைவி நித்தில நகைத்தி,
இருமருங்கு இருண்ட நீலம் ஆயினும்,
வலமருங்கு பொன்னிறம் புரையும் மேனியன்!
இடக்கை பொலம்பூந் தாமரை ஏந்தினும்,
வலக்கை அஞ்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்;
வலக்கால் புனைகழல் கட்டினும், இடக்கால்
தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள், பனித்துறைக்
கொற்கைக் கொண்கன், குமரித் துறைவன்,
பொற்கோட்டு வரம்பன், பொதியிற் பொருப்பன்,
குலமுதற்கிழத்தி; ஆதலின்-அலமந்து,
ஒருமுலை குறைத்த திருமா பத்தினி,
அலமருதிருமுகத்து ஆயிழை நங்கை-தன்
முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக்
‘கேட்டிசின் வாழி, நங்கை! என் குறை' என
- இளங்கோவடிகள்
Super da
ReplyDeleteNice information
ReplyDeleteNice bro👍
Delete